Wednesday, June 25, 2014

இனி சைகைகள் மூலம் கணனியை கட்டுப்படுத்தலாம்..!!! புதிய டெக்னாலஜி...

கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் லீப் மோஷன் (Leap Motion) எனப்படும் கை அசைவினைக் கொண்டு செயற்படக்கூடிய கீபோர்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.
99 டொலர்கள் பெறுமதியான இந்த கீபோர்ட்டினைப் பயன்படுத்தி கணனிப் பாவனையாளர்கள் சைகைகள் மூலம் கணினியின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இத்தொழில்நுட்பம் HP Envy 17 மடிக்கணனியில் காணப்படுகின்றது.

இது தவிர விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடுத்தக்கது. 
இன்னும் தெளிவு பெற கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.... 

Monday, June 23, 2014

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கு உங்களுக்கு ஆசையா???

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கு உங்களுக்கு ஆசையா???  


                                          



ஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை.
ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)
நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.
நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)
நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.
நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் – குறைந்தது 12 குவளை.
நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.
நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.
தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!
மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும். 

நன்றி...!!

Tuesday, June 17, 2014

கண் பார்வையற்றோர்களும் இனி தங்கள் நாவினால் பார்க்க முடியும்...!!





வுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. 



சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.  





கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. 



இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர், பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம். 



வீடியோ காணொளி இங்கே.. http://youtu.be/WMbLbaSp48M

Saturday, June 14, 2014

1200 வருடங்கள் பழைமையான ‘டெப்லட் கணனி’ பற்றி உங்களுக்கு தெரியுமா???






makimai
அன்றைய டெப்லட்


டெப்லட் கணனி என்ற விடயம் தொடர்பில் பல தசாப்தங்களாக பேசப்பட்டு வந்தபோதிலும் அதன் முழுமையான ஒரு வடிவம் எம்மிடையே கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்தே உலவ ஆரம்பித்துள்ளது. ஆனால் 9ஆம் நூற்றாண்டிலேயே ‘டெப்லட் கணனி’ என்ற விடயம் இருந்துள்ளதென்கிறது புதிய அகழ்வாராய்ச்சி ஒன்று. 

சுமார் 1200 வருடங்கள் பழைமையான டெப்லட் கணனியை ஒத்த பொருளொன்றை துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்தான்புல் நகரின் யெனிகபி பிரதேசத்தில் புதையுண்ட பழங்கால கப்பல் பாகங்களிலிருந்தே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

தியோடொஸியஸ் கப்பல்துறைமுகம் என அறியப்பட்ட இத்துறைமுகளம் 4ஆம் நூற்றாண்டில் பைஷாந்தின் தியோடொஸியஸ் 1 எனும் பேரரசினால் கட்டப்பட்டது. அக்காலத்தில் முக்கிய வணிக துறைமுகமாக காணப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட டெப்லட் போன்ற அமைப்பு மரத்தினால் உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவீன 7 அங்குல டெப்லட் போன்று இருந்தாலும் தடிப்பு அதிகமா உள்ளது. இது கப்பலின் கெப்டனுடையதாக இருக்கும் என நம்பம்படுகின்றது.
5 படைகளாக காணப்படும் பழங்கால டெப்லட்டில் குறிப்புகளை பதிவு செய்ய மெழுகு பயன்படுத்தப்பட்டுள்ளதாம். கிரேக்க மொழியில் அதிலுள்ள குறிப்பு தற்போதும் பார்க்கக் கூடியதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய எப்ஸுக்கு பதிலாக மரத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம். 

இஸ்தான்புல் பல்கலைக்கழ கடல்சார் தொல்பொருள் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கப்பல் 60 சதவீதம் பயன்படுத்தக்கூடிய விதத்தில் உள்ளது. இதனால் அக்கப்பலைத் திருத்தி 2015ஆம் ஆண்டில் மீண்டும் கடலில் செலுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது. 

கிறைமியாவிலிருந்து கெர்சொனிஸஸ் எனுமிடத்துக்கு 9ஆம் நூற்றாண்டில் கருங்கடலினூடாக வர்த்தகப்பொருட்களுடன் சென்ற வேளையில் இக்கப்பல் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.  


Thursday, June 12, 2014

FM ரேடியோவில் RDS தொழில்நுட்பம் என்றால் என்ன??

FM ரேடியோவில் RDS தொழில்நுட்பம் என்றால் என்ன?? 

RDS LOGO



சாதாரண மொபைல் போன் முதல் தற்பொழுது பிரபலமாகியுள்ள ஸ்மார்ட்போன்கள் வரை எப்.எம். ரேடியோ வசதி இல்லாத மொபைல்களே இல்லை.
மொபைல்கள் வாங்கும்போது, அதனுடைய மேனுவல் கைடில் அதில் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருப்பார்கள். அதில் FM Radio – RDS என்ற ஒரு குறிப்பையும் பார்க்கலாம்.
எப்.எம். ரேடியோ என்றால் தெரியும். அதென்ன RDS?
RDS என்பது Radio Data Service என்பதன் சுருக்கம். இந்த தகவல்தொழில்நுட்ப நெறிமுறையானது, எப்.எம்.ரேடியோ ஒலிப்பரப்படும்பொழுது, அந்த ரேடியோ நிலையம் குறித்த தகவல்கள் மற்றும் அப்பொழுது ஒலிப்பரப்பபடும் நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகளை டேட்டாவாக அனுப்ப பயன்படும் நுட்பமாகும்.
ஒரு எப்.எம். ரேடியோவை கேட்கும்பொழுது, அந்த நிலைய அறிவிப்பாளர், அந்நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகள், ஒலிப்பரப்படும் ரேடியோவின் பெயரை குறிப்பிடும்வரை நமக்கு தெரியாது.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எந்த ஒரு FM Radio நிகழ்ச்சியாக இருந்தாலும், நீங்கள் வைத்திருக்கும் செல்போனில், அதுகுறித்த தகவல்கள் Data வாக உங்களுக்கு காட்டப்படும்.
செல்போன் மட்டுமல்ல.. கார் ஸ்டீரியோக்களிலும் இதுபோன்ற டேட்டாக்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். செல்போனில் RDS வசதியை பெற செட்டிங்சில் RDS Enable செய்திருக்க வேண்டும். அவ்வாறு எனேபில் செய்திருந்தால் எப்.எம்.ரேடியோவில் ஒலிப்பரப்படும் நிகழ்ச்சி, நேரம், நிலையத்தின் பெயர் போன்ற டேட்டாக்களை செல்போனிலேயே தெரிந்துகொள்ளலாம்.
இந்த வசதியுள்ள செல்போன் மற்றும் கார் ஸ்டீரியோக்களில் எப்.எம். ரேடியோவின் அலைவரிசை எல்லையை கடக்கும்பொழுது, அதில் ஒலிப்பரப்படும் அதே நிகழ்ச்சி வேறொரு எப்.எம்.மில் ஒலிப்பரபப்பாகிக் கொண்டிருந்தால் தானாகவே அந்நிகழ்ச்சிக்கு மாறிவிடும். அவ்வாறு மாறுவதற்கும் RDS தொழில்நுட்பமே காரணம்.
ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படும்பொழுது, இடையே முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியானால், எந்த ஒரு அலைவரிசையில் ரேடியோ ஒலிப்பரப்பாகிக்கொண்டிருந்தாலும், அனைத்து அலைவரிசையிலும் அந்த முக்கியமான அறிவிப்பு ஒலிபரப்பாகும். இதற்கும் இந்த RDS தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. 


Wednesday, June 11, 2014

எம்மை கவர்ந்த Windows XP, எம்மை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது....

 


கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அதுபோல உலக மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Windows Operating System மும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பழைய விண்டோஸ் ஓ.எஸ். பதிப்புகள் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளாக மாறுவதும், பழைய பதிப்புகள் நீக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன.
அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி பயனர்களைக் கவர்ந்து, இன்றும் கூட பயனர்கள் அதை விட முடியாத நிலையில் உள்ள இயங்குதளம் Windows XP தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் ஓ.எஸ்.களில் மிகப்பெரிய அளவில் அதிகமான பயனர்களைப் பெற்றுத் தந்த இயங்குதளம் இது.
2001 ம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1 விட நான்கு பதிப்புகள் முந்தையது ஆகும்.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் இயங்குதளங்களானது , ஆரம்ப கால MS – DOS லிருந்து தற்பொழுது சமீபத்தில் வெளயிடப்பட்ட விண்டோஸ் 8.1 வரை, படிப்படியான மாற்றங்களுக்கு உட்பட்டு, மேம்படுத்தபட்டு வெளிவந்தவை.
ஒவ்வொரு பதிப்பிலும் புதிய நுட்பங்கள், எளிய பயனர் இடைமுகம் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
இதனால் பயனர்கள் பழைய பதிப்பை விட்டுவிட்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு மாறி வந்தனர்.
விண்டோஸ் OS பதிப்புகள்
ஆரம்ப காலத்திலிருந்து வெளிவந்துள்ள விண்டோஸ் OS பதிப்புகள் (ஆண்டு வாரியாக)
  1. MS-DOS – 1981
  2. Windows 1.0 – 1985
  3. Windows 2.0 – 1988
  4. Windows 2.03, Windows 3.0 – 1990
  5. Windows 3.1 – 1992
  6. Windows NT – 1993
  7. Windows 95 – 1995
  8. Windows 98 – 1998
  9. Windows 2000
  10. Windows XP – 2002
  11. Windows Server 2003
  12. Windows 7 – 2007
  13. Windows 8 – 2008
  14. Windows 8.1       



விண்டோஸ் புதிய பதிப்பிற்கு மாறுவது கட்டாயம்.
ஒரு சிலர் மட்டும் இன்னும் மாறாமல் விண்டோஸ் எக்ஸ்பியிலேயே கணினியை இயக்கிக்கொண்டுள்ளனர். குறிப்பாக அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் உள்ளவர்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி – யை பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற பயனர்கள் 84 சதவிகதம் பேர் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, புதிய பதிப்புக்கு மாறிவிட்டனர். ஏனைய 16 சதவிகிதம் பேர் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
Windows XP இயங்குதளங்களுக்கு புதிய அப்டேட் கிடைக்காத நிலையில் இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் இறுதிக்குள் விண்டோஸ் ஓ.எஸ். -ன் அடுத்தடுத்த புதிய பதிப்புகளுக்கு மாறுவது கட்டாயமாகும். இதனால் இணையம் வழியாக ஏற்படும் வைரஸ் போன்ற பிரச்னைகளிலிருந்து கம்ப்யூட்டர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, பதிய பதிப்புகளில் உள்ள மேன்படுத்தப்பட்ட வசதிகளை பெற்று பயனடைய முடியும்.
windows-xp-retired

   
































































































































Tuesday, June 10, 2014

ஓய்வும் புத்திசாலிதனமும்...




கோடரியால் மரம் வெட்டுதல்...




ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்! 



---உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி---

WELCOME..!!!

இந்த இனிய பக்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

இறைவனின் அருள் உங்கள் மீது உண்டாவதாக...

இணைந்திருங்கள்...

நன்றி...